திருச்சிராப்பள்ளி, அக்,21, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் சார்பில், தமிழ் ஆளுமை விருது பெற்ற கவிஞர் இளங் குமரனுக்கு பாராட்டு விழா மற்றும் திருவெறும்பூர் டுலைட் டான்ஸ் ஸ்டுடியோவில் பெருந்தலைவர் காமராசர் நினைவு நூலக திறப்பு விழா உள்ளிட்ட ஐம்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கிளைத் தலைவர் பிரதாப் தலைமை தாங்கினார். பெண்கள் கிளைத் தலைவர் சீத்தா, டுலைட் ஸ்டுடி யோ நிறுவனர் விமலா, வனத்துறை அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெருந்தலைவர் காமராசர் நினைவு நூலகத்தை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க மாநில துணைத்தலைவர் நந்தலாலா திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். விழாவில் சங்க மாவட்டத் தலைவர் சிவ.வெங்கடேஷ், மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ரங்கராஜன்,பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் பாலின் ஜெபசெல்வி கவிஞர் இளங்குமரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக கிளைச் செயலாளர் லாரன்ஸ் லூக் வரவேற் றார். துணை செயலாளர் விஜய் வர்மா நன்றி கூறினார்.