மயிலாடுதுறை, ஜன.8 - மயிலாடுதுறை மாவட்டம் திருக் கடையூரில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் கட்டிடம் கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்டு 2017 ஆம் ஆண்டு மே மாதம் திறக்கப்பட்டது. தற்போது 5 ஆண்டு களே ஆன நிலையில், மிக மோசமாக சேதமடைந்துள்ளதால் அதிகாரிகள், அலுவலர்கள் மட்டுமின்றி அன்றா டம் விவசாயம் சம்பந்தமாக அலுவல கத்திற்கு வரும் விவசாயிகளும் பாதிக்கப் படுகின்றனர். இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் ஐயப்பன் கூறுகையில், “செம்ப னார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட 80-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நூற்றுக்கணக்கா னோர் பல்வேறு வேலைகளுக்காக நாள்தோறும் வந்து செல்லும் இந்த ஒருங்கிணைந்த வேளாண்மை விரி வாக்க மையக் கட்டிடம் 5 ஆண்டு களுக்குள்ளாகவே சேதமடைந்து பழ மையான கட்டிடம் போன்று காட்சி யளிக்கிறது. டைல்ஸ் தரைகள் ஒட்டுமொத்த மாக உடைந்தும், கற்கள் பெயர்ந்தும் கிடக்கின்றன. அதிகாரிகள் இருக்கை யில் அமர்ந்து பணி செய்ய முடியாத அளவிற்கு மேடு, பள்ளங்களாக உள்ளது. எனவே இந்த அலுவல கத்தில் சீரமைப்பு பணிகளை மேற் கொண்டு அதற்கான நிதியை கட்டு மானம் செய்த ஒப்பந்த நிறுவனத்திடம் பெற வேண்டும்” என்றார்.