திருச்சிராப்பள்ளி, ஜூன் 15-
திருச்சி கொட்டப்பட்டில் உள்ள ஆவின் பால் பண்ணை யில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் புதனன்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் பால் உற்பத்தியாளர்கள் 73 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 75 லட்சம் மதிப்பிலான கறவை மாடு வளர்ப்பதற்கான கடனுதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து பால் உற்பத்தி மற்றும் தரம் குறித்து பால்பண்ணையில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘அனைத்து பால் உற்பத்தியாளர்களுக்கும் காலம் நேரத்தை கணக்கிடாமல் உரிய விலை கொடுக்கப்பட வேண்டும் வாடிக்கையாளர்களுக்கு தரமான பாலை, பால் பொருட்களை வழங்க வேண்டும் என்ற தலையாய பொறுப்புடன் செயல்பட்டு வருகிறது.
பால் கொள்முதல் செய்யும் இடத்திலேயே தரத்தை கண்டறிந்து அதற்குரிய விலை கொடுப்பதற்கான நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி உள்ளோம். ஆவின் பலமான கட்டமைப்பை கொண்டுள்ளது. தற்போது ஆவின் பாலில் விற்பனையும் அதிகரித்துள்ளது’’ என்றார்.
நிகழ்ச்சியில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிர தீப்குமார், பால்வளத்துறை மேலான் இயக்குநர் திலீப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.