districts

img

டி.மணல்மேடு 60-க்கும் மேற்பட்டோர் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தனர்

மயிலாடுதுறை,  ஜூன் 13 - மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரை அடுத்துள்ள டி.மணல் மேட்டில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டு விளக்க பேரவை மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான உறுப்பினர் ரசீது வழங்கும் நிகழ்ச்சி தரங்கம்பாடி ஒன்றியச்  செயலாளர் ஏ.ரவிச்சந்திரன், செம்பனார்கோவில் ஒன்றியச் செயலாளர் கே.பி.மார்க்ஸ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.  கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் கே.சாமு வேல்ராஜ் மாநாட்டு தீர்மா னங்களை விளக்கி உறுப்பி னர் ரசீதுகளை வழங்கினார்.  மாவட்டச் செயலாளர் பி.சீனி வாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.சிம்சன், ஜி.வெண்ணிலா, மாவட்டக் குழு உறுப்பினர்கள் காபிரி யேல், வீ.எம்.சரவணன், அம்மையப்பன், கண்ணகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  இந்த பேரவையில், தரங் கம்பாடி, செம்பனார்கோயில் ஒன்றியங்களை சேர்ந்த 100 -க்கும் மேற்பட்டோர் கலந்து  கொண்டனர். பேரவையின் போது மாமாகுடி, வடக் கட்டளை, காலமநல்லூர், முடிகண்டநல்லூர், மடப் புரம், முக்கரும்பூர், பொறை யார், எருக்கட்டாஞ்சேரி கழனிவாசல், கொத்தங்குடி, கடலி பகுதிகளைச் சேர்ந்த 60 -க்கும் மேற்பட்டோர் மார்க்சி ஸ்ட் கட்சியில் இணைந்தனர். புதிதாக கட்சியில் இணைந்தவர்களை மாநில செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ், மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன் ஆகியோர் சால்வை அணி வித்து வரவேற்றனர்.