திருத்துறைப்பூண்டி, ஜூன் 19-
திருவாரூர் மாவட்டத்தில் குடும்ப அட்டையில் இரண்டு சிலிண்டர்கள் வாங்கிய பொதுமக்கள் பிறகு ஒரு சிலிண்டர் ஒப்படைத்தும், அதற்கான ஆவணங்களையும் கொடுத் தும் குடும்ப அட்டையில் சிலிண்டர் எண்ணிக்கை மாறா மல் இருக்கிறது.
வீடு தீப்பற்றி சிலிண்டரும் சேதமடைந்த பிறகு சம்பந் தப்பட்ட நிறுவனத்திடம் ஒப்படைத்த பிறகு இதுநாள் வரை குடும்ப அட்டையில் சிலிண்டரின் எண்ணிக்கை மாறாமல் இருக்கிறது. பல ஆண்டு காலமாக இந்த பிரச்சனை தொடர் கதையாக இருப்பதால் உடனடியாக தமிழக அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.