திருச்சிராப்பள்ளி, அக்.10 - அகில இந்திய விவசாயத் தொழிலா ளர்கள் சங்க அந்தநல்லூர் ஒன்றிய 2-வது மாநாடு ஜீயபுரத்தில் நடந்தது. மாநாட்டிற்கு நடராஜன் தலைமை வகித்தார். சங்க கொடியை ரெங்கநாதன் ஏற்றினார். முருகன் வரவேற்றார். அஞ்சலி தீர்மானத்தை நடராஜன் வாசித்தார். ஆண்டறிக்கையை சீனிவாசன் வாசித்தார். வரவு-செலவு அறிக்கையை செந்தில்குமார் சமர்ப்பித்தார். மாநிலச் செயலாளர் பழநிசாமி, மாவட்டச் செயலாளர் தங்கதுரை, மாவட்ட தலைவர் செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி னர். மாநாட்டில், நூறு நாள் வேலையை 200 நாட்களாகவும், சட்டக்கூலியை ரூ.600 ஆகவும் உயர்த்த வேண்டும். நூறு வேலை தொழிலாளர்களை காலை 7 மணிக்கு புகைப்படம் எடுக்க வர வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதை கைவிட வேண்டும். காவல்காரபாளையம் திருவள்ளுவர் நகர் மற்றும் கொடியாலம் சப்பாணி கோவில் பகுதி மக்களுக்கு மயான எரிமேடை, காத்தி ருப்போர் கூடம் அமைத்துத் தர வேண்டும். முத்தரசநல்லூர் ஊராட்சியில் உள்ள 59 விவசாய தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என்பன உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மாநாட்டில் ஒன்றியத்தின் புதிய செயலா ளராக எஸ்.ஜோதிமுருகன், தலைவராக ஆர். சுப்ரமணியன், பொருளாளராக செந்தில் குமார் உட்பட 10 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது.