திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் தொண்டர்கள் மீது பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பல் நடத்தும் வன்முறை வெறியாட்டத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காட்டூர் பகுதிக்குழு சார்பில் திருச்சிராப்பள்ளியை அடுத்த திருவெறும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பகுதிச் செயலாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஶ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ரேணுகா, கே.சி.பாண்டியன், கனல்கண்ணன், ஜாகிர், நாகூர் மீரான் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.