பெரம்பலூர், ஆக.29 - அதிமுக ஆட்சியில் 39 தடுப்ப ணைகள் கட்டாமல் ரூ.30 லட்சம் முறைகேடு செய்த விவகாரத்தை சிபிசிஐடி விசாரணை நடத்த உத்தர விட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்டக் குழு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்ப லூர் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் விடுத்துள்ள அறிக்கை யில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந் தட்டை ஒன்றியம் மலையாளப் பட்டி ஊராட்சியில் 2019-2020 ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 45 தடுப்பணைகள் கட்டு வதற்கு, ஒரு தடுப்பணைக்கு ரூ.77 ஆயிரம் வீதம் 45 தடுப்ப ணைகளுக்கும் ரூ.34.65 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 45 தடுப் பணைகளும் கட்டி முடிக்கப்பட்ட தாக, முழு தொகையும் நான்கு தனி யார் ஒப்பந்ததாரர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
தடுப்பணை கட்டியதில் முறை கேடு நடந்துள்ளதாக வந்த புகா ரின் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், 45 தடுப்பணைகளில் ஆறு தடுப்பணைகள் மட்டும் கட்டி விட்டு, 39 தடுப்பணைகளை கட்டா மலேயே கட்டி முடிக்கப்பட்டதாக ஆவணங்கள் தயார் செய்து அரசு நிதி ரூ.30 லட்சத்து 3 ஆயிரத்தை முறைகேடு செய்திருப்பது தெரிய வந்துள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீ சார், தனியார் ஒப்பந்ததாரர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது கடந்த சில தினங்களுக்கு முன்பு வழக்குப் பதிந்துள்ளனர். 100 நாள் வேலையிலும் முறைகேடு 2019 - 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் முறைகேடுகள் அதிகம் நடப்ப தாக, அன்றைக்கே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கமும் சுட்டிக்காட்டி பல்வேறு போராட்டங்களை நடத்தியது. 2020 ஆம் ஆண்டு ஆலத்தூர் ஒன்றியம் திம்முர் ஊராட்சியில் நூறு நாள் வேலை திட்டத்தில் சட்டவிரோதமாக இயந்திரத்தை பயன்படுத்தி வேலையை முடித்துவிட்டு, தொழிலாளர்கள் வேலை செய்வது போல் புகைப் படம் எடுத்த போது, திம்மூர் ஜெய லட்சுமி மீது டிராக்டர் ஏறியதில் சம்பவ இடத்தில் அவர் பலியானார். திம்மூர் ஜெயலட்சுமி மரணத் திற்கு நீதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கமும் 19.9.2020 அன்று திம்மூர் ஊராட்சி அலுவலகம் முன்பு காலை முதல் இரவு வரை போராட் டம் நடத்தியது. மேலும் தொடர்ச் சியாக 26.9.2020 அன்று பெரம்ப லூர் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டத்தை நடத்தி யும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. தொடர்ந்து 2020 அக்டோபர் 15 அன்று ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் என அறி விக்கப்பட்டு, காவல்துறை அனு மதி மறுத்து அடக்குமுறையை கையாண்ட போதும் அடக்கு முறையை மீறி புதிய பேருந்து நிலையத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
அந்த போராட்டத்தில் விவசா யத் தொழிலாளர் சங்க அகில இந்திய துணைத்தலைவர் ஏ.லாசர், மாநில பொதுச் செயலாளர் வீ. அமிர்தலிங்கம், மாநிலத் தலை வரும் தற்போதைய கந்தர்வ கோட்டை சட்டமன்ற உறுப்பினரு மான எம்.சின்னதுரை, மாநிலப் பொருளாளர் பழனிச்சாமி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ரமேஷ், திமுக மாவட்டச் செயலாளர் குன்னம் ராஜேந்திரன், திமுக நகர செயலாளரும் தற்போதைய பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பி னருமான பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். எவ்வளவு போராட்டங்கள் நடத் தினாலும், அன்றைய ஆளும் அதிமுக அரசு மவுனம் சாதித்தது. அத்துடன் காவல்துறையை வைத்து அடக்குமுறையை கை யாண்டது. தற்போது அதன் ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் பெரம்பலூர் மாவட்டத் தில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்்பூர், ஆலத்தூர் ஒன்றியங் களில் நூறு நாள் வேலை திட்டத் தில் நடைபெற்ற பணிகளை ஆய்வு செய்தால் இன்னும் அதிக அளவு முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வரும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கருதுகிறது. தமிழ்நாடு முதல்வர், இதில் சிபி சிஐடி விசாரணைக்கு உத்தர விட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சியின் பெரம்பலூர் மாவட் டக் குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.