திருச்சிராப்பள்ளி, ஏப்.15 - இந்தியா கூட்டணியின் சார்பில் பெரம்பலூர் நாடா ளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பா ளர் கே.என்.அருண் நேருவை ஆதரித்து, மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றியக் குழு சார்பில் தெருமுனை கூட்டம் மற்றும் இருசக்கர வாகன பிரச்சார பேரணி நடைபெற்றது. நம்பர் 1 டோல்கேட் பகுதி யில் ஞாயிறன்று நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றியச் செய லாளர் கனகராஜ் தலைமை வகித்தார். புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன் பேர ணியை துவக்கி வைத்து பேசி னார். நம்பர் 1 டோல்கேட்டில் இருந்து புறப்பட்ட இருசக்கர வாகன பிரச்சார பேரணி கூத்தூர், பளூர் வழியாக சமயபுரம் நால்ரோடு பகு தியை சென்றடைந்தது. அங்கு பொதுமக்களி டையே துண்டு பிரசுரம் கொடுத்து திமுக வேட்பாளர் கே.என்.அருண் நேருவிற்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்ட னர்.