புதுக்கோட்டை ஜூன் 23-
ராஜஸ்தான் மாநிலத்தில் வேலை பார்த்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் இறப்புக்கு உரிய இழப்பீடு தருவதாக ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற இருந்த சாலை மறியல் கைவிடப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலி மலையை அடுத்த தெண்ணதிராயான் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச் சாமி (44). ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகில் ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்கு தினக்கூலியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில், பழனிச் சாமிக்கு விபத்து ஏற்பட்டு ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் திருச்சிக்கு கொண்டு வரப்பட் டார். திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் கடந்த 17.6.2023 அன்று சிகிச்சைப் பலனின்றி இறந்து விட்டார்.
இந்நிலையில், இறப்பு குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். இறந்த பழனிச்சாமியின் குடும்பத்திற்கு நீதியும், உரிய இழப்பீ டும் வழங்க வேண்டுமென வலியுறுத்தி வெள்ளிக்கிழமை கீரனூரில் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், கே. சண்முகம், ஒன்றியச் செயலாளர்கள் எஸ்.கலைச்செல்வன் (குன்றாண்டார் கோவில்), என்.மகாலிங்கம் (விராலி மலை) ஆகியோர் தலைமையில் பாதிக் கப்பட்ட பழனிச்சாமியின் உறவினர்கள் கீரனூர் காந்தி சிலையில் இருந்து வட்டாட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக வந்தனர்.
இந்நிலையில், பழனிச்சாமியை வேலைக்கு அழைத்துச் சென்றவர் களின் தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டது. பேச்சுவார்த்தை யில், பழனிச்சாமியின் மருத்துவச் செலவை ஏற்பதோடு, உரிய இழப்பீடும் வழங்குவதாக எதிர்த் தரப்பினர் எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து சாலை மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.