districts

 மயிலாடுதுறை அருகேயுள்ள மாப்படுகையில் சிபிஎம் சாலை மறியல்

மயிலாடுதுறை, ஜூன் 10-

     மயிலாடுதுறை அருகேயுள்ள மாப்படுகையில் தரமற்ற முறையில் பாலம் கட்டப்படுவதைக் கண்டித்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

     மயிலாடுதுறை அருகே மூவலூர்- சோழம்பேட்டை இடையே கும்பகோணம் சாலையையும், கல்லணை சாலையையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ. 4 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிக்கு ஆற்று மணலுக்குப் பதி லாக சவுடு மண் பயன்படுத்துகின்றனர். இதைக் கண்டித்து  சாலை மறியல் நடைபெற்றது.  

    கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் மேகநாதன் தலை மையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டச் செயற் குழு உறுப்பினர் ப.மாரியப்பன், ஒன்றியச் செயலாளர் டி.ஜி.ரவி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்