districts

img

ஊரக வேலை திட்டத்தில் தொடர்ச்சியாக வேலை வழங்க சிபிஎம் கோரிக்கை

உடுமலை, செப்.23 - குடிமங்கலம் ஒன்றியத் தின் ஊராட்சிகளில் ஊரக  வேலை திட்டத்தின் கீழ்  வேலை செய்யும் தொழிலா ளர்களுக்கு தொடர்ச்சியாக வேலை தர வேண்டும் என  திங்கட்கிழமை குடிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவல ரிடம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன் றியச் செயலாளர் என்.சசிகலா அளித்த மனு வில் கூறியிருப்பதாவது, ஊரக வேலை  திட்டத் தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக வேலை தராமல் பெயரளவுக்கு வேலை தரு வதாக குற்றச்சாட்டு வருகிறது. சிக்கனுத்து ஊராட்சியில் முறையாக வேலை வழங்க வட் டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுக்க  வேண்டும். வேலை செய்யும் இடத்தில் குடிநீர்  உள்ளிட்ட தொழிலாளர் பாதுகாப்பு வசதி களை ஏற்படுத்தி தர வேண்டும் என கூறப்பட் டுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் தலை மையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர்.