districts

img

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், பிப்.4-  ஒன்றிய பாஜக அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை, பெரு முதலாளிகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் பலன் அளிக்கக்கூடியதாகவும், ஏழை, எளிய, நடுத்தர மக்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், உழைப்பாளிகள் என அனைவர் மீதும் வரிச்சுமையை ஏற்றும் விதமாகவும் உள்ளது. மேலும், தமிழ்நாடு, கேரளா மற்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கான நலன்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. தஞ்சை ரயிலடி அருகில், தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சி.பி.எம் மாநகரச் செயலாளர் எம். வடிவேலன், தஞ்சை ஒன்றியச் செயலாளர் எஸ்.கோவிந்தராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  மூத்த தலைவர் என்.சீனிவாசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், சி.ஜெயபால், பி.செந்தில்குமார், என்.வி.கண்ணன், என்.சுரேஷ்குமார், எஸ்.தமிழ்ச்செல்வி, கே.அருளரசன், எம்.செல்வம், ஆர். கலைச்செல்வி, என்.சரவணன், கே. அபிமன்னன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் என்.குருசாமி, களப்பிரன், இ.வசந்தி, சி.சரிதா, மற்றும் மாநகரக் குழு உறுப்பினர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.  பட்டுக்கோட்டையில் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சி.பி.எம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ரெ.ஞானசூரியன், மோரீஸ் அண்ணாதுரை, சாமிநாதன், சுந்தரபாண்டியன் மற்றும் எஸ்.தமிழ்செல்வன், மகாலிங்கம், தி.தனபால், குலோத்துங்கன், பழனிசாமி மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.  அம்மாப்பேட்டையில், நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றியச் செயலாளர் வி.ரவி தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.பக்கிரிசாமி, ஏ.நம்பிராஜன் கண்டன உரையாற்றினர். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சரவணன், முனியாண்டி, மயில்வாகனன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  திருவோணம் ஒன்றியம் ஊரணிபுரத்தில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.பாஸ்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வி.தொ.ச மாவட்டச் செயலர் ஆர்.வாசு, மாவட்டக்குழு உறுப்பினர் கே.ராமசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். வி.ச ஒன்றியச் செயலாளர் கோவிந்தராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சின்னப்பா, கணேசன், சுதாகர் மற்றும் பெரியதம்பி, வீரப்பன் சிங்காரவேலு உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.  பேராவூரணி தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி  ரயில் நிலையம் எதிரில், கம்யூனிஸ்ட் கட்சி பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழுக்கள் சார்பில், ஒன்றிய அரசின் மக்கள் விரோத நிதிநிலை அறிக்கையை எதிர்த்து, வியாழக்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சேதுபாவாசத்திரம் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வி.ஆர்.கே. செந்தில்குமார் தலைமை வகித்தார். பேராவூரணி சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வே. ரெங்கசாமி முன்னிலை வகித்தார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர். மனோகரன், மூத்த தலைவர் வீ.கருப்பையா, தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ். வேலுச்சாமி, மாதர் சங்கம் ஏ.மேனகா மற்றும் கட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.