சீர்காழி, ஜன.12- சீர்காழி வட்டாட்சியரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் கொள்ளிடம் ஒன்றிய செய லாளர் கே.கேசவன் தலை மையில் சீர்காழி புதியே பேருந்து நிலையம் எதிரில் கண்டன ஆர்பாட்டம் நடை பெற்றது. மயிலாடுதுறை மாவட் டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் ஊராட்சி மேலஅகரம் கிராமத்தில் 100 ஆண்டுகளாக குடியிருந்து வரும் இடத்தை, எவ்வித குடியிருப்புகளும் இல்லை என்று முறைகேடாக பத்தி ரப் பதிவு செய்வதற்கு சான்று வழங்கிய வருவாய்த் துறையை கண்டித்தும், ஆரப் பள்ளம் ஊராட்சி நல்லூரில் வடிகால் வசதி செய்து தர கோரியும், ஆலாலசுந்தம் ஊராட்சி திருஞானசம்மந்தம் கிராமத்தில் நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்த நடை பாதையை ஆக்கிரமித்துள்ள தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் சீர்காழி வட்டாட்சியர் சண்முகத்தை யும், கோட்டாட்சியர் நாரா யணனையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செய லாளர் பி.சீனிவாசன் கண்டன உரையாற்றினார். மேலும் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஜீ.ஸ்டாலின், எஸ். துரைராஜ், ஏ.வி.சிங்காரவே லன், டிசிம்சன், ஏ.ரவிச்சந்தி ரன், சீர்காழி ஒன்றிய செய லாளர் கே.அசோகன், மாவட்ட குழு உறுப்பினர் எல். சுந்தரலிங்கம், மாதர் சங்க மாநில துணைத் தலைவர் ஜி. கலைச்செல்வி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஜீ. வெண்ணிலா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் எஸ்.இளங்கோ வன், நகர செயலாளர் எஸ். ஞானபிரகாசம் உள்ளிட் டோர் கண்டன உரையாற்றி னர். இதில் ஒன்றிய குழு உறுப்பினர்கள், கிளை செய லாளர்கள், கட்சி உறுப்பினர் கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.