districts

img

ஆளுநரை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, ஜன.12-  மயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூர்  கடைவீதியில்  தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் வியாழனன்று  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் செம்ப னார்கோவில் ஒன்றியச் செயலாளர் கே.பி. மார்க்ஸ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வீ.எம்.சரவணன், கண் ணகி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து  கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு என்று  சொல்ல மறுக்கிற, தமிழ்நாட்டு மக்களை யும், மரபுகளையும் மதிக்காத, அரசியல மைப்புச் சட்டத்தை அவமதிக்கும் வகை யில் நடந்து கொள்ளும் தமிழ்நாடு ஆளு நரின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரி வித்தும், அவர் தமிழ்நாட்டை விட்டு வெளி யேற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டன.

;