திருச்சிராப்பள்ளி, அக், 3, திருச்சி மாவட்டம் அந்த நல்லூர் ஒன்றியம் பழுர் கிரா மத்தை சேர்ந்தவர் திராவிட மணி. இவரை ஜீயபுரம் காவல் துறையினர் பொய் வழக்கில் கைது செய்து கடுமையாக தாக்கி திருச்சி மத்தியசிறையில் அடைத்தனர். பின்னர் உடல் நலக்குறை வால் செப்டம்பர் 28 ஆம் தேதி மரணமுற்றதாக அவரது குடும்பத்தினரிடம் முறையாக தெரிவிக்காமல் பிரேத பரி சோதனை செய்தனர். இந் நிலையில் திராவிட மணி உடலை வாங்க மறுத்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் மீண்டும் பிரேத பரிசோதனை செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் திராவிடமணியின் உடலை வாங்கச் சொல்லி மாவட்ட நிர்வாகம், காவல் துறை, உள்ளூர் அரசியல் பிர முகர்களை வைத்து மிரட்டு வதையும், சாட்சிகளையும், அடையாளங்களையும் கலை த்து மூடி மறைத்து குற்றவாளி களை காப்பற்ற முயற்சிப்பதை கண்டித்து புதனன்று முத்தரச நல்லூர் கடைவீதியில் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், ஊர் பொதுமக்களோடு இணைந்து கருப்புக்கொடி யேந்தி ஆர்ப்பட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் அந்தநல்லூர் ஒன்றிய செய லாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கார்த்திகேயன்,மாறன்,சிவக்குமார், இந்திய மாணவர் சங்க மாநில இணை செயலா ளர் மோகன், மக்கள் கண்கா ணிப்பகம் மாநில செயலாளர் ஆசீர்வாதம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் நூற்றுகணக்கான மக்கள் பங்கேற்றனர்.