மயிலாடுதுறை, பிப்.20- மயிலாடுதுறை மாவட்டம் ஆக் கூரில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்க ளன்று மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் செம்பனார்கோவில் ஒன்றியச் செயலாளர் கே.பி. தலை மை வகித்தார். மாவட்டச் செயலா ளர் பி.சீனிவாசன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், ஆக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வட்டார மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இம்மருத்து வமனையில் போதுமான மருத்து வர்கள் இல்லாததால் நோயாளி கள் கடும் அவதியுறுகின்றனர். ஏற்க னவே பணியாற்றிய மருத்துவர்கள் மேற்படிப்புக்கு சென்ற நிலையில் வெறும் இரண்டு மருத்துவர்கள் மட்டுமே பணியாற்றுவதோடு, இரவு நேரங்கள், ஞாயிற்றுக்கிழமை களில் மருத்துவர்கள் இல்லாத தால் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சைக்காக வருபவர்கள் கடு மையாக பாதிப்பதோடு, இறப்பு களும் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், மருத்துவமனை யின் சீர்கேட்டை கண்டித்தும், உயிர் காக்கும், மருந்துகளை இருப்பு வைத்திட வேண்டும், மருத்துவ மனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை தேவைக்கு ஏற்ப ஊழியர்களை நியமிக்க வேண் டும், கூடுதல் மருத்துவர்களை நிய மனம் செய்ய வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்து வர்கள், இரவு நேரங்களில் தங்கி, பணியாற்ற உறுதிபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப் பட்டன. போராட்டத்தை தொடர்ந்து வட்டார மருத்துவ அலுவலரை மாவட்டச் செயலாளர் பி.சீனி வாசன், ஆக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன், ஒன்றி யச் செயலாளர் கே.பி.மார்க்ஸ் உள்ளிட்டோர் சந்தித்து கோரிக்கை களை முன்வைத்து பேசியதை யடுத்து மருத்துவ அலுவலர் விரை வில் கோரிக்கைகளை நிறை வேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.