districts

img

நரசிங்கபாளையம் பழங்குடி மக்களுக்கு பட்டா கோரி சிபிஎம் மனு

அரியலூர், ஆக. 9- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட  செயற்குழு சார்பில்  புதிதாக பொறுப்பேற் றுள்ள அரியலூர் மாவட்ட ஆட்சியரை மரி யாதை நிமித்தமாக சந்தித்து சால்வை அணி வித்து, புத்தகம் வழங்கப் பட்டது. நிகழ்ச்சியில் கட்சி யின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.வாலண் டினா, மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோ வன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில், நகராட்சிக்கு பின்புறம் 70 குடும் பங்களுக்குச் சொந்தமான இடத்திற்கு செல்ல பாதை வசதி செய்து தர வேண்டும். ஜெயங்கொண்டம், நரசிங்கபாளையம் கிராம பழங்குடியின மக்கள் குடியிருக்கும் இடத்திற்கு, பட்டா வழங்க வேண்டும் எனக் கோரி மனு அளிக்கப்பட்டது. பாதை வசதி செய்து கொடுப்பதாக மாவட்ட ஆட்சி யர் உறுதியளித்தார்.