சிபிஎம் நாகை மாவட்டக் குழு உறுப்பினரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நாகை மாவட்டத் தலைவருமான எம்.என்.அம்பிகாபதி -விஜயலட்சுமி தம்பதியரின் மகள் மருத்துவர் அ.மாதுரி - மருத்துவர் ஜெ.ஹரிஷ்பிரபு ஆகியோரது திருமணம் திருவாரூர் மாவட்டம், காட்டூர் கலைஞர் கோட்டம் அரங்கத்தில் நடைபெற்றது. கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி, சிபிஎம் நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், சிபிஎம் திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவர் வி.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மணமக்களை வாழ்த்தினர்.