districts

கட்டட அனுமதிக்கான கட்டண உயர்வை கைவிடுக! சிபிஎம் மாமன்ற உறுப்பினர் சுரேஷ் கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, செப்.2 - திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் அன்பழ கன் தலைமையில், மாநகராட்சி ஆணையர் சரவணன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை யில் வெள்ளியன்று நடைபெற்றது.  கூட்டத்தில் நடந்த கவுன்சிலர்கள் விவாதம் பின்வருமாறு:  35 ஆவது வார்டு சிபிஎம் மா மன்ற உறுப்பினர் சுரேஷ் பேசுகை யில், ஆன்லைன் மூலம் கட்டட  அனுமதி வழங்குவது வரவேற்கத் தக்கது. இது பொதுமக்களின் அலைச் சலை வெகுவாக குறைக்கும். அதே நேரத்தில் இந்த கட்டண உயர்வு 100 சதவீதம் அதிகமாகும். ஏற்கனவே ஒன்றிய அரசின் நிர்ப்பந்தத்தின் பேரில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த வேளையில், கட்டட அனு மதிக்கான கட்டண உயர்வு என்பது பொதுமக்கள் மீது மேலும் சுமையை ஏற்படுத்துவதாக அமையும். எனவே இந்த கட்டண உயர்வை கைவிட வேண்டும். உய்யக்கொண்டான் வாய்க்கால் முழுவதுமாக கழிவு நீர் வாய்க்காலாக மாறி இருக்கிறது. அது மட்டுமல்ல, அந்த வாய்க்கால் முறையான நேரத்தில் சரியாக தூர் வாரப்படுவதும் இல்லை. இதனால்  தெற்கு உக்கடை பகுதியில் ஆற்று நீர் ஊருக்குள் புகுந்து மிகுந்த  இன்னலுக்கு மக்கள் ஆளாகி  இருக்கின்றனர். பொதுப்பணித் துறை இதனை சரிவர கண்டு கொள் வதில்லை. பாதாளச் சாக்கடை பணிகள் மிக வும் மெத்தனப் போக்குடன் நடை பெறுகிறது. இதனால் கடந்த சில தினங் களுக்கு முன்பு 22 வயது இளை ஞர் ராஜ்குமார் சர்க்கார் என்பவர் உயி ரிழந்துள்ளார். அவர் தனது குடும்பத் திற்கு ஒரே மகன். மாநகராட்சியின் பாதாளச் சாக்கடை நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யும்போது இது போன்ற உயிரிழப்பு ஏற்பட்டால், அதற்கான இழப்பீட்டை சேர்த்து ஒப்பந்தத்தில் குறிப்பிட வேண்டும். இந்த உயிரிழப்பிற்கு மாநக ராட்சி எவ்வித இழப்பீடும் கொடுக்க வில்லை. எல்என்டி நிறுவனம் மட்டுமே இறுதிச் சடங்கிற்கு ஒன்றரை  லட்சம் ரூபாய் கொடுத்துள்ளது. பாதா ளச் சாக்கடை நிறுவனம் பணிகள் முடிந்தவுடன் சாலைகளை சீரமைப்ப தில் கவனம் செலுத்துவதில்லை. சாலைகள் குண்டும் குழியுமாக விபத்து  ஏற்படும் நிலையில் உள்ளன. மாநகரம் முழுவதும் பெருவாரி யான இடங்களில் குடிநீருடன், கழிவு  நீர் கலக்கும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது. இதற்கு முறையான நிரந்தர தீர்வு காண வேண்டும். தூய்மைப் பணியாளரின் சம்ப ளத்தை ஆட்சியரின் ஆணைப்படி வழங்க வேண்டும். கடந்த கூட்டத் தில் கோரிக்கை வைத்த போது,  அதற்காகத்தான் வேதா நிறுவனத் திற்கு ஆறு சதவீதம் உயர்த்தி வழங்குகிறோம். விரைவில் தூய்மைப்  பணியாளர்களுக்கு ஆட்சியர் ஆணையின்படி சம்பளம் வழங்கப் படும் என உறுதி அளித்தீர்கள். ஆனால் அதற்கான எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை. அதே போல அன் ஸ்கில்டு லேபர்ஸ் ஓய்வூதி யப் பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். அரசாணைப்படி 754 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும். செந் தண்ணீர்புரம் முதல் ஜி.கார்னர் வரையிலான ஹைவேஸ் இல் உயர் மட்ட விளக்கு பொருத்த வேண்டும்” என்றார். ரெக்ஸ் (காங்) - பாலக்கரையில் அமைந்துள்ள நடிகர் திலகம் சிவாஜி  கணேசனின் சிலைக்கு அக்டோபர் 1  

அன்று திறப்பு விழா காண வழி வகை செய்ய வேண்டும்.  அம்பிகாபதி - மன்னார்புரம் மேம்பாலம் ஜங்ஷன் மேம்பாலம் பகுதிகளில் புது கழிப்பிடம் அமைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்மா உணவகத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். செம்பட்டை மயானம் அமைத்து தர  நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பீஸ் முத்துக்குமார் (மதிமுக) -  அழகிரிபுறத்தில் உள்ள படித்து றையை உயர்த்தி மேம்படுத்த நட வடிக்கை எடுக்க வேண்டும்.  முத்துக்குமார் (திமுக) - எனது வார்டில் குடிநீர் கலங்கலாக வருகிறது  அதனை சரி செய்ய வேண்டும். ஜவகர் (காங்) - ஸ்ரீரங்கம் அடி மனை பிரச்சனையில் மாநகராட்சி  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக  நகராட்சி இடத்தை வைத்திருக் கும் போது திடீரென்று அறநிலையத் துறை இடம் எங்களுக்கு சொந்தம் என்று சொல்வது எந்த வகையில் நியாயம். இதற்கு எதிராக மாநக ராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜயலட்சுமி கண்ணன் (கோட்டத் தலைவர்) - எனது கோட்டத் தில் வார்டு குழு கூட்டம் நடத்த போதிய இடவசதி இல்லை. எனவே கோட்ட வளாகத்தில் தற்காலிகமாக கூட்டம் நடத்த மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து தர வேண்டும்.  இதைத் தொடர்ந்து கவுன்சி லர்கள் பலர் பேசினர். பின்னர் பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் பாலு நகரப் பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி உதவி ஆணையர், செயற்பொறியாளர்கள், உதவி செயற் பொறியாளர்கள், சுகாதார அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.