மயிலாடுதுறை, நவ.24- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயி லாடுதுறை மாவட்டக் குழு அலுவலக புதிய கட்டடத்தின் கட்டுமான பணி விரைவில் துவங்கப்படவுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்களின் பங்களிப்புடன் கட்டப்படவுள்ள அலுவலக கட்டுமானப் பணிக்கான நிதி சேர்ப்பு இயக்கம் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரை ராஜ், டி.சிம்சன், ஜி.வெண்ணிலா, ஒன்றியச் செயலாளர்கள் ஏ.ரவிச்சந்திரன், கே.பி.மார்க்ஸ், சி.விஜயகாந்த் உள்ளிட்டோர் செம்பனார்கோவில், ஆக்கூர், திருக்கடை யூர், இலுப்பூர் சங்கரன்பந்தல், ஆயப்பாடி, கொத்தங்குடி, பெரம்பூர், குத்தாலம் ஆகிய பகுதிகளில் கட்டுமானப் பணிக்காக அளித்த நிதி சேர்ப்பு இயக்கத்தில் ஈடுபட்டனர்.