districts

img

சிபிஎம் கும்பகோணம் கிளை உறுப்பினர்கள் தேர்தல் நிதி வழங்கல்

கும்பகோணம் ஏப்.10- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரப் பகுதியில், சிபிஎம் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு ‘இந்தியா’ கூட்டணிக்கு வாக்குச் சேகரித்து வருகின்றனர்.  இந்நிலையில் கட்சியின் கும்பகோணம் மாநகரம் பழைய பேருந்து நிலையம் கிளை சார்பில் 2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, கிளை தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் நிதி வசூல் செய்தனர். நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், மாநகரச் செயலாளர் கா.செந்தில்குமார், மாநகரக் குழு உறுப்பினர் ம.கண்ணன், ஒன்றியச் செயலாளர் சி.கணேசன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட செயலாளர் சின்னை. பாண்டியனிடம் கிளைச் செயலாளர் கே.ராமமூர்த்தி ரூ.10,400  நிதியை கொடுத்தார்.  தேர்தல் நிதி வழங்கிய கிளை உறுப்பினர்களுக்கு, தஞ்சை மாவட்டக் குழு மற்றும் கும்பகோணம் மாநகர குழு சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.