தஞ்சாவூர், மார்ச் 19- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு கூட்டம், தஞ்சை கணபதி நகரில் மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் பி.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, கட்சியின் மத்தியக் குழு, மாநிலக் குழு முடிவு களை விளக்கி உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டி யன், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். 18 ஆவது மக்களவைத் தேர்தலில், கடந்த 10 ஆண்டு காலமாக நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கும் பாஜக வின் மக்கள் விரோதக் கொள்கை களால் கார்ப்பரேட்களுக்கு ஏராளமான வரிச் சலுகைகள் வாரி வழங்கப்பட்டு உள்ளன. ஏழை-எளிய மக்களின் நிலை அதலபாதாளத்தில் உள்ளது. கார்ப்ப ரேட்- இந்துத்துவா கொள்ளைக் கூட்டணி இந்த நாட்டையே அழித்துக் கொண்டிருக்கிறது. மறுபுறம் விவசாயிகளுக்கு விரோத மாக, விவசாயிகளின் விளைபொரு ளுக்கு உரிய விலை கொடுக்க வில்லை. உரம், பூச்சி மருந்து உள்ளிட்ட இடுபொருட்கள் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. விவசாயத் திலிருந்து விவசாயிகள் வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருகிறது. மேலும், வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டு விவசாயத் தொழிலாளர்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக் கின்றனர்.
நூறு நாள் வேலையை முற்றாக அழித்து விடும் கொள்கையை ஒன்றிய அரசு பின்பற்றிக் கொண்டிருக் கிறது. தொழிலாளர்களின் அன்றாட வாழ்வாதாரம் பறிக்கப்பட்டுள்ளது. பெண் கள், குழந்தைகளுக்கு எதிரான வன் கொடுமைகளும், கும்பல் பாலியல் வல்லுறவுகளும் அதிகரித்துள்ளன. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு வீதியில் தள்ளப்பட்டுள் ளனர். புதிய கல்விக் கொள்கையால், சாதாரண, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மாணவர்களுக்கு கல்வி மறுக்கப் படும் கொள்கை பின்பற்றப்படுகிறது. சிறுபான்மை மக்களுக்கு எதிராக மத வெறியை தூண்டி, நாடு முழுவதும் மதக் கலவரத்தை ஏற்படுத்துகிறது பாஜக. இத்தகைய மோசமான, அனைத்து தரப்பு மக்களுக்கும் எதிராக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் பாசிச பாஜகவின் சர்வாதிகார ஆட்சியை முறியடித்திட, இத்தேர்தல் இந்திய வர லாற்றில் மிக முக்கியமான தேர்த லாகும். மதச்சார்பின்மையை பாதுகாக்க, மக்கள் ஒற்றுமை, ஜனநாயகத்தை பாது காக்க, சர்வாதிகாரத்தை வீழ்த்திட, ‘இந்தியா’ கூட்டணியில் தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு ஜனநாயக கூட்டணியின், தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர், மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் ஆகியோரின் வெற்றிக்கு கடுமையாக உழைத்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத் தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.