districts

வரலாறு காணாத வறட்சி : நிவாரணம் வழங்க சிபிஎம் வலியுறுத்தல்

தருமபுரி, மே 5- தருமபுரி மாவட்டத்தில் கடுமை யான வரலாறு காணாத வறட்சி நில வுவதால் விவசாயிகளுக்கும், விவ சாய தொழிலாளர்களுக்கும் நிவார ணம் வழங்க வேண்டுமென மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து சிபிஎம் மாவட்டச்  செயலாளர் ஏ.குமார் வெளியிட் டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற தேர்தலில் தருமபுரி தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டி யிட்ட திமுக வேட்பாளர் ஆ.மணிக்கு  வாக்களித்த வாக்காளப் பெருமக்க ளுக்கும், தேர்தல் பணியில் முழு வீச் சில் ஈடுபட்ட அனைவருக்கும் மார்க் சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுக் களைத் தெரிவித்துக் கொள்கிறது. தருமபுரி மாவட்டம் வரலாறு காணாத வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள 8 அணைகளும், 600க்கும் மேற்பட்ட ஏரிகளும், ஆழ் துளைக் கிணறுகளும் 90 சதவீதத் துக்கு மேல் வறண்டு விட்டன. நிலத் தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து விட்டது. விவசாயிகள் சாகுபடி செய்த நெல், கரும்பு, மஞ்சள், வாழை  உள்ளிட்ட பயிர்கள் கருகி வருகின் றன. நகரங்களிலும், கிராமங்களிலும்  கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற் பட்டுள்ளது. கால்நடைகளுக்கு தீவ னம் பெரும் பிரச்சனையாக உள் ளது.  எனவே, தருமபுரி மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறி வித்து, விவசாயிகளுக்கும், விவசா யத் தொழிலாளர்களுக்கும் நிவார ணம் வழங்க வேண்டும். விவசாயிக ளின் பயிர்க்கடன்களைத் தள்ளுபடி  செய்ய வேண்டும், ஒகேனக்கல் கூட் டுக்குடிநீரை அனைத்துக் குடியிருப் புகளுக்கும் தினசரி தடையின்றி கிடைப்பதை உறுதிப்படுத்த வேண் டும். கால்நடைகளுக்கு மானிய விலையில் தீவனம் வழங்க வேண் டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டு இருந்தது.