திருச்சிராப்பள்ளி, பிப்.13- திருச்சி மாவட்டம் மணப் பாறை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றம் நடைபெற்றது. அப்போது நெடுஞ்சாலை துறையினர் பாரபட்சமாக செயல்பட்டதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நெடுஞ் சாலைத் துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மணப்பாறை வட்டச் செயலாளர் கோபால கிருஷ்ணன் தலைமை வகித் தார். புறநகர் மாவட்டச் செயற் குழு உறுப்பினர் சிதம்பரம், மாவட்டக் குழு உறுப்பினர் கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.