திருவாரூர், ஆக.27 -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் ஒன்றிய குழு கூட்டம் உறுப்பினர் பி.மாதவன் தலைமையில் மாவூரில் நடைபெற்றது.
ஒன்றிய அரசை கண்டித்தும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்திட வேண்டுமென வலியுறுத்தி செப்டம்பர் 7 அன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தை விளக்கும் வகை யில் செப்.2 அன்று இருசக்கர வாகனப் பிரச்சாரம் நடத்தி மக்களை திரட்டுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா.கோமதி, திருவாரூர் ஒன்றியச் செயலா ளர் என்.இடும்பையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.