districts

கேரளாவை ரத்தக் களரியாக மாற்ற வகுப்புவாத சக்திகளை அனுமதிக்கக் கூடாது

திருவனந்தபுரம், டிச.20- அமைதியான கேரளாவை சீரழிக்க வகுப்புவாத சக்திகளின் இரு பிரிவினர் கொடூரமாக கொன்று குவிப்பதை உடனடி யாக நிறுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு வலி யுறுத்தியுள்ளது. இதுகுறித்து சிபிஎம் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:  மதச்சார்மின்மையில் நம்பிக்கை கொண்டவர்களும் அவர்களது குடும்பத்தி னரும் விழிப்புணர்வோடும், எச்சரிக்கையோ டும் களம்காண வேண்டும். கேரளாவை ரத்தக் களரியாக மாற்ற முயலும் வகுப்புவாத சக்திகளின் நெருப்புக்கு எதிராக நிற்க முன்வர வேண்டும். எல்டிஎப் ஆட்சியில், நாட்டிலேயே சிறந்த சட்டம் ஒழுங்கு  பராம ரிக்கப்படும் மாநிலமாக கேரளா திகழ்கிறது.  அதை ஒழிக்க வகுப்புவாத சக்திகள் போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மதவாதத்தின் பெயரால் மக்களிடையே போட்டியையும் அராஜகத்தையும் உருவாக்கி நாட்டில் மதக்  கலவரத்தை உருவாக்குவதே இதன் நோக்க மாகும். இதற்காக சமூக வலைதளங்கள் உட்பட தவறாக பயன்படுத்தப்படுகின்றன. ஆலப்புழா மாவட்டத்தில் இரு வகுப்பு வாத சக்திகளால் வெவ்வேறு நேரங்களில்  நடத்தப்பட்ட கொலைகள் மனித நேயத்திற் கும் அமைதியான வாழ்க்கைக்கும் விடுத் துள்ள சவாலாகும். பாஜக தலைவர் எஸ்டிபிஐ  கட்சியினரால் கொடூரமாக கொலை செய்யப் பட்டார். எஸ்டிபிஐ தலைவர் ஸ்கூட்டரில்  பாஜக தொண்டர் கார் மோதவிட்டு கொல்லப் பட்டார்.

மாநிலத்தில் அமைதியை சீர்குலைக் கும் சதியின் ஒரு பகுதியாக இந்த தாக்கு தல்கள் நடத்தப்பட்டுள்ளன. வன்முறைச் சக்திகளுக்கு எதிராக மாநில  அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுத் துள்ளது நிம்மதி அளிக்கிறது. இரண்டு  கொலைகளுக்கும் காரணமானவர் களையும், அதன் பின்னணியில் இருப்பவர்க ளையும் பிடிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்ப டும் என முதல்வர் கூறியிருப்பது வகுப்புவாத சக்திகளுக்கும், வன்முறைகளுக்கும் எதி ரான ஆட்சியின் உறுதிப்பாட்டைச் சான்றா கக் காட்டுகிறது. எல்டிஎப் ஆட்சி மீது கொலை கார சக்திகளே பழி சுமத்துவது வியப்ப ளிக்கிறது. கேரளம் சட்டத்தின் ஆட்சி இல்லாத மாநில மாக மாறிவிட்டது என்று பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா கூறியிருப்பது பாஜக வின் அரசியல் நோக்கத்தை உணர்த்துகிறது. காங்கிரஸ் தலைவர்களின் எதிர்வினைகளில் பாஜகவின் குரல் ஒலிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு தெரிவித்துள்ளது.