பாபநாசம், ஜூன் 28-
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒழுங்கு முறை விற்ப னைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது. ஜெயங்கொண்டம், காரைக்குறிச்சி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, எரவாஞ்சேரி உள்ளிட்டப் பகுதிகளிலிருந்து 471 விவசாயிகள், ரூ.52 லட்சத்து 43 ஆயிரத்து 524 மதிப்பு டைய 849 குவிண்டால் பருத்தியை மறைமுக ஏலத்திற்கு எடுத்து வந்தனர். கும்பகோணம், பண்ருட்டி, செம்பனார் கோவில், விழுப்புரம், குத்தாலம், ஆக்கூர் முக்கூட்டு உள் ளிட்ட பகுதிகளிலிருந்து வந்திருந்த வணிகர்கள் அதிக பட்சம் ரூ 6,729, குறைந்தபட்சம் ரூ 5,319, சராசரி 6,175 என விலை நிர்ணயம் செய்து பருத்தியை கொள்முதல் செய்தனர்.