திருச்சிராப்பள்ளி, மார்ச் 26- தமிழ்நாடு நுகர்பொருள் வாணி பக் கழகப் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் திருச்சிராப்பள்ளியில் நடை பெற்றது. மாநிலத் தலைவர் வி.குமார், மாநிலப் பொதுச்செயலாளர் ஆர். புவனேஸ்வரன், மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் ஆர்.மோகன், மாநிலத் துணைத் தலைவர்கள் வி. கதிரேசபாண்டியன், சுப்புராஜ், என். ராசப்பன், ஆர்.ராஜாங்கம், மாநி லப் பொருளாளர் எம்.ஏழுமலை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிர்வாகத்தின் பரிந்துரையை ஏற்று தமிழக அரசு, பணியாளர் களுக்கு குறைந்தபட்சம் ரூ4 ஓய்வூ தியம் வழங்க வேண்டும். கடந்த ஜனவரி மாதம் முதல் 38 விழுக்காடு அகவிலைப்படி வழங்குவதாக அரசு அறிவித்தது. அதில், இதுவரை வழங்கப்படாமல் உள்ள உயர்த்தப் பட்ட நான்கு விழுக்காடு அகவிலைப் படியையும் வழங்க வேண்டும். சுமார் 1600 காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். 2016 வரையிலான பருவ கால பணியாளர்களை பணி நிரந்தம் செய்யவேண்டும். சுமைப்பணி தொழிலாளர்களுக்கான கூலியை டன் ஒன்றுக்கு ரூ. 30 வழங்கப்படு கிறது. அதை மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்தி வழங்க வேண் டும். கடந்த எட்டு மாதங்களாக நடத்தாமல் உள்ள கூலி உயர்வுப் பேச்சுவார்த்தையை நடத்த வேண் டும். சிலிண்டர் விநியோகம் செய்யும் தொழிலாளர்களுக்கு இந்திய ஆயில் நிறுவன உத்தரவின் அடிப்ப டையில் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 27.50 வழங்க வேண்டும். நெல் கொள் முதல் நிலையங்களில் ஊழியர்களி டம் லாரி மாமுல் ரூ4 ஆயிரம் வசூல் செய்வதைத் தடை செய்ய வேண் டும். நெல் கொள்முதல் நிலையங்க ளில் தேங்கிக் கிடங்கும் நெல் மூட்டை களுக்கான சேதார இழப்பை தொழி லாளர்களின் தலையில் சுமத்தக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை அரசு பரிசீலிக்க வேண்டு மென தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. கோரிக்கைகளை வலி யுறுத்தி திருச்சிராப்பள்ளில் மே 6-ஆம்தேதி அனைத்து தொழிற்சங்க மாநில மாநாடு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.