districts

ஆணைக்காடு கிராமத்தில் தார்ச்சாலை அமைப்பது தாமதம்

தஞ்சாவூர், ஜூன் 13-

      தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றி யம், காலகம் ஊராட்சி ஆணைக்காடு கிரா மத்தில், ஆதிதிராவிடர் தெருவுக்கு தார்ச் சாலை அமைக்கும் பணி தாமதமாவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

     ஆணைக்காடு கிராமத்தில் ஆதிதிரா விடர் தெருவில் ஏற்கனவே இருந்த தார்ச் சாலை முற்றிலும் சேதமடைந்ததால், புதிய  சாலை அமைக்க கோரிக்கை விடுத்ததை யடுத்து ஒன்றியக்குழு உறுப்பினர் நிதியிலி ருந்து, ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கடந்த நவம்பர் மாதம் பணிகள் தொடங்கப்பட்டு சாலையில் கிராவல் அடிக்கப்பட்டதுடன் பணிகள் ஏதும் நடைபெறவில்லை.

    இதனால் இந்தச் சாலையைப் பயன்  படுத்தி வரும் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த மக்கள் வாகனங்களில் செல்வ தற்கும், நடந்து செல்வதற்கும் மிகுந்த சிர மப்பட்டு வருகின்றனர். இரவு நேரங்களி லும், மழைக் காலங்களிலும், இருசக்கர வாகனத்தில் செல்லும் போது விபத்துகள் ஏற்படுகின்றன. உடனடியாக தார்ச் சாலை  பணியை முடித்து தர அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். 

     மயானத்திற்கு செல்லும் சாலையை புதிதாக அமைக்கவும், மயான சுற்றுப்புறச்  சுவர் அமைக்க வேண்டும், இடிந்து விழும்  நிலையில் உள்ள சமுதாயக் கூடத்தை இடித்து  விட்டு புதிய சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி  தூண்கள் சேதமடைந்து இருப்பதையும் சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட ஆதிதிரா விடர் மக்களின் கோரிக்கைகளை தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் புறக்கணிப்பதாகவும், அதிகாரிகள், இது குறித்து ஆணைக்காடு ஆதிதிராவிடர் தெருவை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தஞ்சா வூர் ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பி யுள்ளனர்.