நாகப்பட்டினம் மாவட்டம் தலையாயிறு ஒன்றியம் பாங்கல் ஊராட்சியில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.16.42 லட்சம் செலவில் கட்டப்படும் புதிய நியாய விலை கடைக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வீ.பி.நாகைமாலி அடிக்கல்லை நாட்டினார். நிகழ்வில் தலைஞாயிறு ஒன்றிய பெருந்தலைவர் தமிழரசி,ஒன்றிய குழு உறுப்பினர் பிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர் பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.