திருச்சிராப்பள்ளி, மே 9-
கோனோகார்பஸ் எனும் நச்சு மரம் குறித்த விழிப்பு ணர்வுக் கூட்டம் அறத் தமிழன் பேரியக்கம் சார்பில் திருச்சி ராப்பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அறத்தமி ழன் பேரியக்க நிறுவனர் விஜய் சீதாராமன் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், “உலக நாடுகளிலும், இந்தி யாவின் பல மாநிலங்களும் தடை செய்யப்பட்ட மரம் கோனோ கார்பஸ் எனும் நச்சுமரம். இது ஒரு நீர் உறிஞ்சி மரமாகும். இம் மர வளர்ப்பிற்கு தெலுங்கானா அரசு எழுத்துப்பூர்வ தடை விதித்துள்ளது.
பல மாநிலங்களில் தடை செய்யப்பட்ட இந்த மரம் தமிழ கம் முழுவதும் பெருமளவில் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக திருச்சிராப்பள்ளியில் இம்மரங்கள் சாலை ஓரங்களிலும், நடைபாதை மற்றும் பூங்காக்களிலும் வளர்க்கப்பட்டு வருகின்றன. இம்மரத்தின் வேர்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நீரைக் கூட உறிஞ்சும் தன்மை கொண்டவை.
வீட்டுச் சுவர்கள், நிலத்தடியில் செல்லும் குடிநீர்க் குழாய்கள் மற்றும் தொலைத் தொடர்புச் சாதனங்களை யும் தகர்க்கும் தன்மை கொண்டவை. மனிதர்களுக்கு சுவாசக் கோளாறு, ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை போன்ற உடல் நலக் குறைபாடுகளும் உண்டாகின்றன.
தமிழ்நாட்டில் கோனோகார்பஸை வேரோடும் வேரடி மண்ணோடும் கலைந்து எரியவில்லை எனில் தமிழ்நாடு பாலை நிலம் ஆவதற்கு நாமும் ஒரு காரணியாக மாறி நிற்போம்” என்றார்.