அரியலூர், ஆக.31 - சென்னையில் சட்டமன்ற நாயகர் கலைஞர் கருத்தரங்க பேச்சுப் போட்டியில் வென்று பரிசு பெற்ற அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பெண்கள் மேல் நிலைப் பள்ளி மாணவியை அனைத்து ஆசி ரியர்கள், மாணவிகள் பாராட்டினர். மாநில அளவிலான இந்த போட்டியில் மாணவி தேவதர்ஷினி, “கலைஞர் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது” என்ற தலைப்பில் பங்கேற்றார். இதில் வென்ற மாணவி தேவ தர்ஷினிக்கு, சிறப்பு பரிசாக சான்றிதழ், புத்தகம், பரிசுத்தொகை ஆகியவற்றை தமிழ் நாடு அரசின் சட்டமன்ற தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன் வழங்கினார். வெற்றி பெற்ற மாணவிக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளி உதவி தலைமையாசிரியர் இங்கர்சால் தலைமை யில் பாராட்டப்பட்டார்.