districts

img

தேசிய அளவிலான யோகா போட்டி தங்கப் பதக்கம் வென்ற பரணி பார்க் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

கரூர், மே 3 - யோகா பெடரேஷன் ஆஃப் இந்தியாவால் தேசிய அளவிலான 46-வது சப்-ஜூனியர் மற்றும் ஜுனி யர் நேஷனல் யோகா சாம்பி யன்ஷிப் 25.12.2021 முதல் 28.12. 2021 வரை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இப் போட்டியில் பல்வேறு மாநிலத் தைச் சேர்ந்த மாணவ, மாணவி கள் கலந்து கொண்டனர்.  இதில் பரணி பார்க் பள்ளி மாண வர்கள் ஜனார்த்தனன் ஆர்டிஸ்டிக் யோகா சோலோ பிரிவில் முதலிட மும், மாணவர்கள் ஜனார்த்தனன் மற்றும் கபிலன் ஜோடி ரிதமிக் யோகாசன பிரிவில்  முதலிடம் பெற்று தங்கப்பதக்கங்களை வென்று தேசிய அளவில் சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.  இவ்விழாவில் பரணி பார்க் கல்விக் குழும தாளாளர் எஸ்.மோகனரெங்கன், செயலாளர் பத்மாவதி மோகனரெங்கன், பரணி  பார்க் கல்விக் குழும முதன்மை  முதல்வர் முனைவர் சி.ராம சுப்பிரமணியன், நிர்வாகக் குழு உறுப்பினர் சுபாஷினி, பரணி பார்க்  பள்ளியின் முதல்வர் கே.சேகர், யோகா ஆசிரியை கே.ராணி, இரு பால் ஆசிரியர்கள் மற்றும் பெற் றோர் ஆகியோர்  பாராட்டினர்.