தஞ்சாவூர்/கரூர், ஜூலை 27- ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத நிதிநிலை அறிக்கையைக் கண்டித் தும், தமிழ்நாட்டைப் புறக் கணித்த, உணவு மானி யத்தை குறைத்த, நூறு நாள் வேலை திட்டத்தில் கூடுதல் நிதி ஒதுக்காத, விவசா யத்தை புறக்கணித்த, வேலையின்மைக்கு முக்கி யத்துவம் அளிக்காத நாசகர நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து, ஆகஸ்ட் 1 அன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) லிபரேசன் ஆகியவற்றின் சார்பில், தஞ்சை மாவட்டத்தில் 10 இடங்களில், ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மறி யல் போராட்டம் நடத்திட அறைகூவல் விடுக்கப் பட்டுள்ளது.
இந்த மறியல் போராட் டத்தை, தஞ்சை மாவட்டத் தில் வெற்றிகரமாக நடத் துவதற்கு, இடதுசாரிக் கட்சி களின் ஆலோசனைக் கூட்டம், தஞ்சாவூர் கணபதி நகரில் உள்ள சிபிஎம் மாவட்டக் குழு அலுவல கத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண் டியன் தலைமையில் நடை பெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டப் பொரு ளாளர் கே.பாஸ்கரன், நிர்வாகக் குழு உறுப்பினர் வெ.சேவையா, சிபிஐ (எம்எல்) லிபரேசன் மாவட்டச் செயலாளர் டி.கண்ணையன் மற்றும் சிபிஎம் மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டுக்கு எதி ரான, ஒன்றிய அரசின் மக்கள் விரோத நிதிநிலை அறிக்கையை கண்டித்து தஞ்சை மாவட்டத்தில் உள்ள 10 தாலுகா தலை நகரங்களில், ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பாக 10 ஆயிரம் பேரை திரட்டி மறியல் போராட்டம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. மறி யல் போராட்டத்தின் கோரிக் கைகளை விளக்கி கிராமம், நகரங்களில் பிரச்சாரம் செய்து துண்டுப் பிரசுரம் விநியோகிப்பது என தீர்மா னிக்கப்பட்டது.
கரூர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்.) ஆகிய கட்சிகளின் கூட்டுக் குழு கூட்டம், கரூர் சுங்க கேட்டில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவ லகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயலாளர் மா.ஜோதிபாசு தலைமை வகித்தார். ஒன்றிய பாஜக அரசின் நிதிநிலை அறிக் கையில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காததை கண்டித்து ஆக.1 அன்று கரூர் காம ராஜ் சிலை அருகில் மறி யல் போராட்டம் நடத்துவ தெனவும், இதில் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கொள்ள வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.