சேதுபாவாசத்திரம், ஏப்.19-
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில், அதானியின் ஊழல் சாம்ராஜ்யத்திற்கு துணை போகும் மோடி தலைமையிலான பாஜக அரசைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
மல்லிப்பட்டினம் கடைத்தெருவில் நடைபெற்ற கூட்டத்திற்கு எஸ்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
சேதுபாவாசத்திரம் கடைவீதியில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஜெ.அகிலன், ரெட்டவயல் கடைவீதியில் நடைபெற்ற கூட்டத்திற்கு வி.ஆர்.கே.செந்தில்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.
தெருமுனைக் கூட்டத்தில், சிபிஎம் மாவட்டச் செயற்குழு ஆர்.மனோகரன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.வாசு, வழக்குரைஞர் வீ.கருப்பையா, ஆர்.எஸ்.வேலுச்சாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.