ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவராகும் வாய்ப்பை பறிக்கும் ஒன்றிய பாஜக அரசின் நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரியும் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) குளறுபடிகளைக் கண்டித்தும் ஜூலை 4 வியாழக்கிழமையன்று காவிரி டெல்டா மாவட்டங்களில் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.