பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி அஞ்சல் துறை என்.இ.பி.இ சங்க அங்கீகாரத்தை. ரத்துச் செய்த ஒன்றிய அரசைக் கண்டித்து பி.எஸ். என்.எல்.இ.யு., ஏ.ஐ.பி.டி.பி.ஏ., டி.என்.டி.சி.டபுள்யுயு சங்கங்கள் சார்பில் பி.எஸ்.என்.எல் திருச்சிராப்பள்ளி மண்டல பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.பி.டி.பி.ஏ மாவட்டச் செயலாளர் சின்னையன், பி.எஸ். என்.எல்.இ.யு மாவட்டச் செயலாளர் சுந்தரராஜ், அஸ்லம்பாஷா, ஏ.ஐ.பி.டி.பி.ஏ மாநிலச் செயற்குழு உறுப்பினர் தேவராஜ், பி.எஸ்.என்.எல்.இ.யு மாவட்ட உதவிச் செயலாளர் செல்வராஜ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.