districts

img

மனித உரிமை மீறலில் ஈடுபட்டதற்கு கண்டனம் காவல்துறை துணைத் தலைவர் அலுவலகம் முற்றுகை கைது

தஞ்சாவூர், ஏப்.26-

   தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி  தஞ்சாவூருக்கு வந்தபோது மாண வர் சங்கத் தலைவர் பட்டம் பெறு வதைத் தடுத்து, அவரை தனியறை யில் அடைத்து வைத்து மனித உரிமை மீறலில் ஈடுபட்ட தஞ்சாவூர்  காவல்துறையைக் கண்டித்து  புதன்  கிழமை தஞ்சாவூர் சரக காவல்  துறை துணைத் தலைவர் அலுவல கத்தை முற்றுகையிட்டவர்களை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தனது காவல்துறை  பலத்தைக் காட்டி கைது செய்தார்.

   தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில், கடந்த 24-ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு மாணவர் களுக்கு பட்டங்கள் வழங்கினார். பட்டமளிப்பு விழாவில் எம்.பில் பட்  டம் பெறுவதற்காக, இந்திய மாண வர் சங்க மாநிலத் தலைவர் அர விந்த்சாமி அமர்ந்திருந்தார்.

  இந்த நிலையில், பட்டமளிப்பு விழா அரங்கில் இருந்து அரவிந்த சாமியை கருப்பு கொடி காட்ட திட்ட மிட்டுள்ளார் எனக்கூறி பொய்யான தகவலை பரப்பிய காவல்துறை யினர் அவரை வலுக்கட்டாயமாக   வெளியேற்றி தள்ளிச் சென்று ஒரு  அறையில் சிறைவைத்தனர். அவ ரது உடைகளை களைந்து சோத னையிட்டனர். பின்னர் கவர்னர் சென்ற பிறகு அவருக்கு பட்டம் வழங்கப்பட்டது. இதையடுத்து அன்றைய தினமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் போராட் டம் நடைபெற்றது.  

   இருப்பினும் தமிழக கவர்ன ரைக் காரணம் காட்டி காவல்துறை யினர் மேற்கொண்ட நடவடிக் கைக்கு மாணவர்கள், வாலிபர்கள் தொடர்ந்து தங்களது கண்டனத்தை  பதிவு செய்து வருகின்றனர்.

   இதனொரு பகுதியாக புத னன்று தஞ்சாவூர் சரக காவல்துறை  துணைத் தலைவர் அலுவலகத்தை  முற்றுகையிடப் போவதாக மாண வர்கள் அறிவித்திருந்தனர். இத னால் அதிர்ச்சியடைந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தனது தலைமையில்  காவல்துறை யினரை குவித்து வைத்திருந்தார். இந்த நிலையில் ராணி பாரடைஸ் மேம்பாலம் பகுதியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்  சங்கம்  வாலிபர் சங்கத்தினர், மாண வர் சங்க மாநிலச் செயலாளர் நிரு பன் சக்கரவர்த்தி தலைமையில், காவல்துறையைக் கண்டித்து முழக்  கங்களை எழுப்பியவாறு டிஐஜி  அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றனர். ஆனால், காவல்துறை யினர்  தடுப்பு அரண்களை வைத்து அவர்களைத் தடுத்து நிறுத்தினர். காவல்துறை தடுப்புகளைத் தாண்டி போராட்டக்காரர்கள் முன்னேறிச் சென்று காவல்துறை துணைத்தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து மாணவர் சங்கத் மாவட்டத் தலை வர் அர்ஜுன், மாவட்டச் செயலாளர்  சந்துரு, சந்தோஷ், அன்புமணி, ராகுல், வாலிபர் சங்க மாவட்டச்  செயலாளர் ஆம்பல் துரை.ஏசு ராஜா, சரவணன், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 38 பேரை காவல்துறை யினர், பெரும் போராட்டத்திற்கி டையே  குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர்.