கும்பகோணம், டிச.20 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஒன்றியம் தேவனாஞ்சேரியைச் சேர்ந்தவ ரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் கோல்டன் நகர் கட்சி முன்னாள் கிளைச் செயலாளருமான பி.எம்.பாஸ்கர் நவம்பர் 29 அன்று காலமானார். இந்நிலையில், புதனன்று அவரது சொந்த ஊரான கும்பகோணம் அருகே உள்ள திரு நல்லூரில் உள்ள இல்லத்தில் படத்திறப்பு நடைபெற்றது. சிபிஎம் கும்பகோணம் ஒன்றியச் செயலா ளர் கணேசன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் நாகராஜன், திருப்பூர் மனோ கரன், அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோழர் பி.எம்.பாஸ்கர் உருவப் படத்தை மாநிலக் குழு உறுப்பினர் வி.மாரி முத்து திறந்து வைத்தார். மாநிலக் குழு உறுப்பினர் திருப்பூர் கே.காமராஜ், தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கோ.நீலமேகம், ஆர்.மனோ கரன், கே.அருளரசன் மாவட்டக் குழு உறுப்பி னர் ஆர்.சி.பழனிவேல், விடுதலை சிறுத்தை கள் கட்சி மாவட்டச் செயலாளர் முல்லைவள வன், மண்டலச் செயலாளர் சா.விவேகானந் தன், திமுக ஊராட்சி மன்றத் தலைவர் ராஜா உள்ளிட்ட அனைத்து கட்சியினர் மல ரஞ்சலி செலுத்தினர்.