districts

img

தோழர் நல்லு படத்திறப்பு நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி, நவ.21- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழரும், மணப்பாறை பகு தியில் கட்சியை அமைப்ப தற்கு அரும்பாடு பட்டவரு மான மறைந்த தோழர் நல்லு வின் படத்திறப்பு மணப் பாறை வட்டக்குழு சார்பில் ஜீவா தெருவில் உள்ள கட்சி  அலுவலகத்தில் ஞாயிறன்று நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு மணப் பாறை வட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். தோழர் நல்லு  உருவப்படத்தை கந்தர்வ கோட்டை சட்டமன்ற உறுப்பி னர் எம்.சின்னதுரை திறந்து வைத்து புகழஞ்சலி செலுத் தினார்.  அப்போது சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை பேசுகையில், மணப்பாறை யில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து 5 தோழர்களு டன் வெளியேறி நெருக்கடி யான காலகட்டத்தில் இப்  பகுதியில் கட்சியை கட்டிய வர் தோழர் நல்லு. கட்சியை மட்டும் அல்ல கட்சிக்கான கட்டிடத்தையும் கட்டியவர்.  ஜாதிய கட்டமைப்பு மிக்க கிராமங்களுக்கு சென்று, ‘‘ஜாதி வேண்டாம், மத வெறுப்பு அரசியல் வேண் டாம், இன வெறுப்பு அரசி யல் வேண்டாம், நம்மை படைக்க, பாதுகாக்க ஒரு  பொன்னுலகம் அழைக்கி றது வா’’ என இப்பகுதியில் கட்சியை வளர்த்தெடுத்தவர். வெறுப்பு அரசியல், மத  அரசியல், சாதிய அரசியல்,  சுயநல அரசியல் ஆகியவற்  றைக் கடந்து வர்க்க ஒற்றுமை யை கட்டமைத்து இந்தியா வில் ஒரு புதிய விடுதலைக் காக போராடக்கூடிய ஒரே  கட்சி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி என்ற மன உறுதி யோடு நிற்கக்கூடிய தலை வர்களை எல்லாம் இழந்து இருக்கின்றோம். அவர்கள் விட்டுச் சென்ற பயணத்தை நிரப்புவதற்கு நம்முடைய உழைப்பால், தியாகத்தால் நிறைவேற்ற வேண்டும்’’ என்றார். நிகழ்ச்சியில் புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெய சீலன், மாநகர் மாவட்டச்  செயற்குழு உறுப்பினர் ரெங்கராஜன், புறநகர் மாவட்  டச் செயற்குழு உறுப்பினர் சிதம்பரம், மருங்காபுரி ஒன்  றியச் செயலாளர் தியாக ராஜன், வையம்பட்டி ஒன்றி யச் செயலாளர் வெள்ளைச் சாமி ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர்.  வட்டக் குழு  உறுப்பினர் சுரேஷ் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் வட்ட குழு உறுப்பினர்கள் உட்பட பலர் தோழர் நல்லுவின் உரு வப்படத்திற்கு மலர் தூவி  செவ்வணக்கம் செலுத்தினர்.