நாகப்பட்டினம்/மயிலாடுதுறை, நவ.20- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் நாகை மாவட்டக் குழு சார்பில் மறைந்த தோழர் என்.சங்கரய்யா விற்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடை பெற்றது. மாவட்டத் தலைவர் ஆவ ராணி ஆனந்தன் தலைமை வகித்தார். என்.சங்கரய்யா வாழ்க்கை வரலாற்று நூலான “என்.சங்கரய்யா வாழ்க்கையும்-இயக்கமும்” நூல் குறித்தும், அவருடைய நினைவலைகள் பற்றியும் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப் பினர் நாகைமாலி உரை யாற்றினார். மாவட்டச் செய லாளர் ஆதி.உதயகுமார் புக ழஞ்சலி செலுத்தினார். புகழ் வணக்க கவிதைகளை தமுஎகச நிர்வாகிகள் வாசித் தனர். செம்பனார்கோவில் மயிலாடுதுறை மாவட் டம் செம்பனார்கோவில் மேலமுக்கூட்டில் புக ழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. செம்பனார் கோவில் ஒன்றியக் குழு சார்பில் ஒன்றியச் செயலா ளர் கே.பி.மார்க்ஸ் தலைமை யில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எஸ்.துரைராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் கள் கண்ணகி, வீ.எம்.சர வணன் உள்ளிட்டோர் உரை யாற்றினர். சிபிஐ ஒன்றியச் செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, வாலிபர், மாதர், மாணவர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.