districts

img

தோழர் குப்புசாமி படத்திறப்பு

திருவாரூர், நவ.18 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் கிளை  செயலாளரும், விவசாய  தொழிலாளர் சங்கத்தின்  ஒன்றிய குழு உறுப்பினரு மான திருவாரூர் மாவட்டம் திட்டாணிமுட்டம் ஊராட்சி முசிறியத்தில் வசித்த தோழர்  ஆர்.குப்புசாமி கடந்த சில  வாரங்களுக்கு முன்பு கால மானார். திட்டாணிமுட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை படத்திறப்பு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கொரடாச்சேரி ஒன்றியச் செயலாளர் டி.ஜெயபால் தலைமை வகித்தார். மாவட் டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி தோழர் குப்பு சாமி படத்தை திறந்து வைத் தார். மாநிலக் குழு உறுப் பினர் ஐ.வி.நாகராஜன், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச்  செயலாளர்  வீ.அமிர்த லிங்கம் ஆகியோர் புக ழஞ்சலி உரையாற்றினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.சேகர், தலைவர் எஸ். தம்புசாமி, சிஐடியு மாவட்டச்  செயலாளர் டி.முருகையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.