திருத்துறைப்பூண்டி, டிச.18 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தின் ஸ்தாபகத் தலைவரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான தோழர் தனலட்சுமி என்கிற பாப்பா உமாநாத்-ன் 11 ஆம் ஆண்டு நினைவு தினம் மாதர் சங்கத்தின் திருத்து றைப்பூண்டி நகர குழு சார்பில் நடைபெற் றது. அவரது படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் நகர செயலாளர் என்.கோதாவரி தலைமை வகித்தார். சிபிஎம் நகர குழு உறுப்பினர் ஜி. யசோதா, சங்கத்தின் கிளை செயலாளர் கே. மலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மன்னார்குடி
கட்சியின் மன்னார்குடி நகரக் குழு சார்பில், நகரக் குழு செயலாளர் ஜி.தாயுமானவன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப் பினர் டி.சந்திரா, தோழர் பாப்பாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து அவரது நினைவுகளை போற்றி உரையாற்றினார். ஒன்றிய செயலாளர் கை.ஜெயபால், விவசா யிகள் சங்க நகரச் செயலாளர் ஜி.மாரி முத்து, சிஐடியு இணைப்பு சங்கத் தலைவர் தியாக.சிவ.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை
மாதர் சங்கத்தின் சார்பில் திருக்கடையூ ரில் சங்க கொடியினை ஒன்றியத் தலைவர் சண்முகவள்ளியும், இலுப்பூர் - சங்கரன் பந்தல் கடைவீதியில் மாவட்டச் செயலாளர் கு. வெண்ணிலா ஆகியோர் ஏற்றி வைத்தனர். ஒன்றிய செயலாளர் ரா.ராணி, குணசுந்தரி, செல்வபாக்யவதி, ப.பார்வதி மற்றும் மாதர் சங்கம் நிர்வாகிகள், உறுப்பினர்கள் வீர வணக்கம் செலுத்தினர்.