திருத்துறைப்பூண்டி, அக்.3 - மாணவர்களுக்கு வழங்கக் கூடிய கல்விக் கடனை கட்டாய வசூல் செய்யும் வங்கிகளை கண்டித்து திங்கட்கிழமை திருத்துறைப்பூண்டி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருத்துறைப்பூண்டி நகர குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகரத் தலைவர் காமராஜ் தலைமை வகித்தார். நகர செயலாளர் தமிழ்மணி முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட தலைவர் ஏ.கே.வேலவன் கண்டன உரையாற்றினார். மாவட்ட துணை செயலாளர் பி.விஜய், மாவட்ட குழு உறுப்பினர் வழக்கறிஞர் இன்குலாப், நகர பொருளாளர் வழக்கறிஞர் கோகிலா, நகர துணை செயலாளர் சண்முகம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழ்மணி, மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.சாமிநாதன், பிரகாஷ், நகரச் செயலாளர் கோபு, நகரக் குழு உறுப்பினரும் நகர்மன்ற துணைத் தலைவருமான எம்.ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.