districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டார மாநாடுகள்

சிபிஎம் திருவெறும்பூர்  வட்டச் செயலாளராக ஆர்.குருநாதன்,  வடக்கு ஒன்றியச் செயலாளராக ஆர். ரவிக்குமார் தேர்வு

திருச்சிராப்பள்ளி, நவ.4 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவெறும்பூர் வட்ட 13 ஆவது மாநாடு  ஞாயிறன்று அண்ணா வளைவு ஏ.ஆர்.எஸ் திரு மண மண்டபத்தில் நடந்தது. மாநாட்டிற்கு தோழர்கள்  கணேசன், சங்கர், சித்ரா ஆகியோர் தலைமை வகித்த னர். மாநாட்டு கொடியை மூத்த தோழர் முருகேசன் ஏற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் தெய்வ நீதி வரவேற்றார். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர் துவக்க உரையாற்றினார்.  துவாக்குடியில் இயங்கி வந்த 100-க்கும் மேற்பட்ட சிறு தொழிற்சாலைகளுக்கு மீண்டும் வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும். பெல்-க்கு  நிரந்தர புதிய வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். விவசாயிகளின் இன்சூரன்ஸ் தொகையை தனியார் நிறுவனம் வழங்கா மல் அரசே வழங்க வேண்டும்  என்பன உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. திருவெறும்பூர் தாலுகா திருவெறும்பூர் வட்டக் குழு,  திருவெறும்பூர் வடக்கு ஒன்றியம் என இரண்டாக பிரிக்கப்பட்டது.  திருவெறும்பூர் வட்டக் குழு உறுப்பினர்களாக 13  பேரும், அதன் செயலாள ராக ஆர்.குருநாதனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். திருவெறும்பூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.ரவிக்குமார் உட்பட 11 பேர் கொண்ட வட்டக்குழு தேர்வு  செய்யப்பட்டது.  மாவட்ட செயற்குழு உறுப் பினர் சிவராஜன் வாழ்த்துரை வழங்கினார். புறநகர் மாவட்டச் செயலா ளர் ஜெயசீலன் நிறைவுரை யாற்றினார். வட்டக்குழு உறுப் பினர் அமீர் நன்றி கூறினார்.

சிபிஎம் மின் அரங்க கமிட்டி செயலாளர் ஆர்.தமிழ்செல்வன்

அரியலூர், நவ. 4 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மின் அரங்க இடைக்கமிட்டி மாநாடு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தனியார் திருமண மண்டபத்தில் டி.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.  மாநாட்டுக் கொடியை மூத்த நிர்வாகி எஸ்.காசிநாதன் ஏற்றினார். மாநில மின் அரங்க பிராக்சன் உறுப்பினர் அகஸ்டின் துவக்க உரையாற்றினார். கட்சியின் அரியலூர் மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன் வாழ்த்தி பேசினார். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு பொதுச் செயலாளர் ராஜேந்திரன் நிறைவுரையாற்றினார். மாநாட்டில் மின்சார வாரிய ஊழியர்களின் சம்பளம் மற்றும் பணி நிரந்தரத்தை மின்சார வாரியமே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  5 பேர் கொண்ட புதிய ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டு, அதன் செயலாளராக ஆர்.தமிழ்ச்செல்வன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சிபிஎம் மருங்காபுரி  வட்டச் செயலாளராக வி.நாகராஜன் தேர்வு

திருச்சிராப்பள்ளி, நவ.4 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் திருச்சிராப்பள்ளி மாவட்டம் மருங்காபுரி வட்டக் குழு 3 ஆவது மாநாடு ஞாயிறன்று துவரங்குறிச்சி எம்.ஜெ.மஹாலில் நடை பெற்றது. மாநாட்டிற்கு தோழர்கள் அழகர்சாமி, சசிகலா ஆகி யோர் தலைமை வகித்தனர். மாநாட்டு கொடியை மூத்த  தோழர் அழகர்சாமி ஏற்றி னார். வட்டக் குழு உறுப்பி னர் சின்னையா வரவேற்றார்.  மாநிலக் குழு உறுப்பினர் சின்னதுரை துவக்க உரை யாற்றினார். காவிரி உபரிநீரை மருங்காபுரி வட்டத்தில் உள்ள கண்மாய்களில் நிரப்பி மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டக்குழு செயலாள ராக வி.நாகராஜன் உட்பட 8 பேர் கொண்ட வட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப் பினர் சந்திரன் வாழ்த்துரை  வழங்கினார். மாவட்ட  செயற்குழு உறுப்பினர்  சிதம்பரம் நிறைவுரையாற்றி னார்.