திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் அடவங்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் குமார் (50) செவ்வாய்க்கிழமை காலமானார். அவரது மறைவு செய்தி அறிந்து கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, கொரடாச்சேரி ஒன்றியச் செயலாளர் டி.ஜெயபால், ஒன்றியக்குழு உறுப்பினர் சி.லோகநாதன், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் ஆர்.மணியன் ஆகியோர் தோழர் குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.