districts

img

இன்சூரன்ஸ் முகவர்களின் கமிசன் குறைப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, செப்.12 - இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையத்தின் இன்சூரன்ஸ் முகவர்கள் கமிசன் குறைப்பு முன்மொழிவை கண்டித்து அகில இந்திய எல்.ஐ.சி. முகவர்கள் சங்கம் சார்பில் திங்களன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி கண்டோன்மெண்ட் எல்ஐசி கிளையில் தலைவர் மார்ட்டின் டேனியல் ஜெயக்குமார், ஸ்ரீரங்கம் கிளையில் தலைவர் கோபால், திருச்சி யூனிட் 1ல் ராஜசேகர், திருவெறும்பூர் கிளையில் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை விளக்கி கோட்டத்தலைவர் பொன்.வேலுச்சாமி, கோட்ட துணைத் தலைவர் ராஜேந்திரன், கோட்ட துணைச் செயலாளர் இந்திராணி ஆகியோர் பேசினர். அரியலூர் அரியலூர், ஜெயங்கொண்டம் எல்ஐசி முகவர்கள் சங்கம் சார்பில் அரியலூர் எல்ஐசி அலுவலகம் முன்பு கிளை தலைவர் ஆறுமுகம் மற்றும் ஜெயங்கொண்டம் நீலமேகம் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில செயலாளர் என்.ராஜா, சிஐடியு மாநில மாவட்ட செயலாளர் பி.துரைசாமி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

;