அறந்தாங்கி பிப்.18- புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கி அருகே தாந்தோணி ஊராட்சி, செட்டிக்காடு கிராமத்தில் ஸ்ரீ மாயன்பெருமாள் கோயில் திடலில் 2 ஆம் ஆண்டு வட மாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. காளைகள் மற்றும் மாடு பிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் களத்திற்குள் அனுமதிக்கப் பட்டனர். முன்னதாக மாயன் பெருமாள் கோயில் காளை அவிழ்க்கப்பட்டு போட்டி துவங்கியது. இதற்காக அமைக்கப்பட்ட களத்தில் மதுரை, சிவகங்கை, திண்டுக் கல், புதுக்கோட்டை உள் ளிட்ட பகுதிகளிலிருந்து 12 காளைகளும், 12 குழுக் களை சேர்ந்த 100 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்ட னர். இந்த மஞ்சுவிரட்டு 12 சுற்றுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு சுற்றிலும் 9 வீரர்கள் அனுமதிக்கப்பட்ட னர். இதில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரி மையாளர்களுக்கும் ரொக் கப் பரிசுகள் வழங்கப்பட் டன. இதனை அறந்தாங்கி மற்றும் பிற மாவட்டங் களைச் சேர்ந்த பலர் கண்டு களித்தனர். நிகழ்ச்சியில் அறந் தாங்கி வட்டாட்சியர் திரு நாவுக்கரசர், சிலட்டூர் மண்டல துணை வட்டாட்சி யர் பாலமுருகன், காவல் ஆய்வாளர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.