districts

திருச்சி முக்கிய செய்திகள்

ஏப்ரலில் அரைவைக் கொப்பரை  கொள்முதல் தொடக்கம்

தஞ்சாவூர், மார்ச்.3 -  தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் முதல் அரைவைக் கொப்பரை கொள்முதல் செய்யப்பட உள்ளது என ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள் ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறைக்கு உட்பட்ட தஞ்சாவூர் விற்பனை குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கும் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் மூலமாக அரைவைக் கொப்பரை 6,200 டன் கொள்முதல் செய்ய இலக்கு திட்டமிடப்பட்டுள்ளது.  நன்கு உலர வைத்து தரமுள்ள அரைவைக் கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூ.108.60 க்கு கொள்முதல் செய்யப்படும். கொப்பரைக்கான கிரையத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக வரவு வைக்கப்படும். தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் வரை அரைவைக் கொப்பரை கொள்முதல் செய்யப்பட உள்ளது.  இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயி கள் தங்களது சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை அணுகி பதிவு செய்து, தங்களது கொப்பரையை விற்பனை செய்து பயனடையலாம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

புகளூர் பாரி சர்க்கரை ஆலையின்  நச்சு புகையால் மக்கள் கடும் பாதிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

கரூர், மார்ச் 3. புகளூர் இஐடி பாரி சர்க்கரை ஆலையி லிருந்து வெளியேறும் நச்சு புகையால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப் படுவதற்கும், ஆலை நிர்வாகம் அலட்சிய மாக செயல்படுவதற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரி வித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு விடுத்துள்ள அறிக்கையில், ‘‘கரூர் மாவட்டம் புகளூ ரில் இயங்கிவரும் இஐடி பாரி சர்க்கரை ஆலையில், பாய்லரில் எரிக்கப்படுகின்ற நிலக்கரி மற்றும் கரும்புகையிலிருந்து வெளியேறுகின்ற கரித்துகள்களை அப்புறப்படுத்தும் இயந்திரங்களை நிர்வாகம் முறையாக பராமரிக்கததால் பாய்லரின் புகை போக்கியிலிருந்து வெளியேறும் புகை கருமை நிறத்துடன் கரித்துகளுடன் வெளியேறுகிறது.  மாசுகட்டுப்பாட்டு வாரியம் நிர்ண யித்துள்ள எந்த விதிமுறைகளையும் நிர்வாகம் பின்பற்றாமல் செயல்படுவ தால் புகளூரை சுற்றி பல கிலோமீட்டர் வரை வீடுகளில் கரித்துகள்கள் படிந் துள்ளது.  மிக நுண்ணிய மைக்ரான்களில் கரித்துகள்கள் காற்றில் கலந்து வருவ தால், அதனை சுவாசிக்கும் மக்களுக்கு பல்வேறு நோய் உபாதைகள் ஏற்படுகின் றன. குறிப்பாக குழந்தைகள், வயதான வர்கள் மற்றும் சுவாச கோளாறு நோயா ளிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்ற னர். எனவே, ஆலை நிர்வாகம் முறை யான இயந்திரங்களை பயன்படுத்தி புகைபோக்கி மூலமாக கரித்துகள்கள் காற்றில் பரவாமல் உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.   மேலும் அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட துறைகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலை யிட்டு புகளூர் சுற்றுப்பகுதி மக்களின் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்த வேண்டும்.  ஆலை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில், மக்களை திரட்டி இஐடி பாரி சர்க்கரை ஆலையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் தொடர் போராட் டங்கள் நடத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

ஒரு கிலோ தேங்காய்  ரூ.21.75-க்கு ஏலம் 

தஞ்சாவூர், மார்ச் 3-  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற தேங்காய் மறைமுக ஏலத்திற்கு தஞ்சை விற்பனைக்குழுவின் செயலாளர் சரசு, விற்பனைக் கூட கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மேற் பார்வையாளர் வேதமுத்து, உதவி வேளாண் அலுவலர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஏலத்தில், பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 29.1 குவிண்டால் உரித்த தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் தனியார் வணிகர்களின் அதிகபட்ச விலையாக குடுமிக்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.21.75 என நிர்ண யிக்கப்பட்டது. குறைந்தபட்ச விலை ரூ.21 என நிர்ணயம்  செய்யப்பட்டது.

மார்ச் 7, 14, 21 தஞ்சாவூரில் கால்நடை வளர்ப்பு பயிற்சி

தஞ்சாவூர், மார்ச் 3-  தஞ்சாவூர் கால்நடை மருத்துப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் கால்நடை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சிகள் மார்ச் 7, 14, 21 ஆம் தேதிகளில் நடைபெற வுள்ளன. இதுகுறித்து தஞ்சாவூர் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத் தலைவர் கே.ஜெக தீசன் கூறுகையில், ‘‘தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ் சாலையிலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் இயங்கி வரும் கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வெள்ளாடு  வளர்ப்பு குறித்து மார்ச் 7 ஆம் தேதியும், நாட்டுக் கோழி வளர்ப்பு குறித்து மார்ச் 14 ஆம் தேதியும், கறவை மாடு  வளர்ப்பு குறித்து மார்ச் 21 ஆம் தேதியும் காலை 10 மணி முதல் இலவசப் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.  பயிற்சியில் விருப்பமுள்ள விவசாயிகள் ஆதார்  நகலுடன் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04362-264665 என்ற எண்ணில் காலை, 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் தொடர்பு கொள்ளலாம்’’ என்று தெரி வித்துள்ளார். 

மார்ச் 7க்குள் உள்ளக புகார் குழு அமைக்காத நிறுவனங்களுக்கு அபராதம்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 3- திருச்சி மாவட்டத்தில் அரசு, தனியார் நிறுவனங்க ளில் மகளிர்களுக்கு ஏற்படும் பாலியல் தொடர்பான குற்றங்களை தடுக்கவும், புகார் தெரிவிக்கவும் நிறுவ னங்கள் வாரியாக உள்ளக புகார் குழுவை மார்ச் 7-ஆம் தேதிக்குள் விதிமுறைப்படி அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.  மேலும் புகார்களை விசாரிக்க பாதுகாப்பு பெட்டி வைக்க வேண்டும். பணிபுரியும் இடத்தில் மூத்த பெண் பணியாளரை தலைவராக நியமனம் செய்ய வேண்டும். பெண்கள் சார்ந்த பிரச்சனைகளை முன்னெடுத்து அவற்றை கலைந்திட விருப்பம் உடையவர் அல்லது மகளிர் சங்கங்களை சேர்ந்த அல்லது பாலியல் வன்கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு உடைய நபர்களில் ஒருவரை நியமிக்க வேண்டும்.  எனவே, புகார் குழு அமைக்காத நிறுவனத்துக்கு பணியிடத்தில் பாலியல் வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2013 பிரிவு 26 கீழ் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

மார்ச் 1-ல் பேரணி  கருத்தரங்கு

அரியலூர், மார்ச் 3- சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அரியலூர், மார்ச் 3- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் பழுப்பு நிலக்கரி மற்றும் அனல்மின் திட்டத்திற்காக  தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் சார்பில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை, நில உரிமையாளர்களி டமே ஒப்படைக்க தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்து இருந்தது.  இதனடிப்படையில், ஜெயங்கொண்டம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் மூலம் மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டு, 32 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில், உரிய நில உரிமையாளர்களுக்கு நிலப்பட்டாவை மாற்றிக் கொடுக்க மக்கள் நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது.  இதன் மூலம் நில உரிமையாளர்களுக்கு உடனடி யாக பட்டா மாற்றம் செய்து வழங்கப்படும் என்று ஜெயங் கொண்டம் தனி வட்டாட்சியர் வேலுமணி கூறினார்.அனைத்து சங்க பிரதிநிதிகள் கூட்டம் அரியலூர் சிஐடியு சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.துரைசாமி தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.அம்பிகா, மாவட்டத் தலைவர் பி.பத்மாவதி, பொருளாளர் ஜெ.துர்கா, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.ரவீந்திரன், பொருளாளர் எ,அருண்பாண்டியன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஆர்.சிற்றம்பலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மார்ச்-12 அரியலூரில் பேரணி மற்றும் திறந்தவெளி கருத்தரங்கம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

மக்கள் நீதிமன்றத்தில்  32 வழக்குகளுக்கு தீர்வு

அரியலூர், மார்ச் 3- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் பழுப்பு நிலக்கரி மற்றும் அனல்மின் திட்டத்திற்காக  தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் சார்பில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை, நில உரிமையாளர்களி டமே ஒப்படைக்க தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்து இருந்தது.  இதனடிப்படையில், ஜெயங்கொண்டம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் மூலம் மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டு, 32 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில், உரிய நில உரிமையாளர்களுக்கு நிலப்பட்டாவை மாற்றிக் கொடுக்க மக்கள் நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது.  இதன் மூலம் நில உரிமையாளர்களுக்கு உடனடி யாக பட்டா மாற்றம் செய்து வழங்கப்படும் என்று ஜெயங் கொண்டம் தனி வட்டாட்சியர் வேலுமணி கூறினார்.

இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் பலி

ஜெயங்கொண்டம், மார்ச் 3- திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் சிங்காரம் மகன் சுரேஷ் (40). இவரது மனைவி சுமித்ரா (34). இவர்கள் இருவரும் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே சூரக்குழியில் உள்ள உறவினர் லதாவை பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். துளாரங்குறிச்சி மேம்பாலம் அருகே சென்ற போது, இருசக்கர வாகனம் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த தம்பதியினரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  இதில், திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகு றித்து உடையார்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லை  119.75 அடியாக குறைந்த முல்லைப் பெரியாறு அணை குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

தேனி, மார்ச் 3- நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாத நிலையில் முல்லைப் பெரியாறு அணையில்  தண்ணீர் திறக்கப்படு வதால் கடந்த இரண்டு மாதத்தில் 22 அடி நீர் மட்டம் குறைந்து 119.75 அடியாக குறைந்து விட்டது  முல்லைப் பெரியாறு அணையில் கடந்த ஜனவரி மாதத்தில் அணையின் நீர்மட்டம் 142 அடி வரை உயர்ந்தது. அதனைத்தொடர்ந்து பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம்  சீராக குறைந்து வருகிறது. கடந்த 2 மாதத்தில் 22 அடி வரை  நீர்மட்டம் குறைந்துள்ளது. வியாழனன்று  காலை நில வரப்படி அணையின் நீர்மட்டம் 119.75 அடியாக உள்ளது.  அணைக்கு 48 கனஅடிநீர் வருகிறது. 467 கன அடி நீர் திறக்கப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்  மட்டம் வேகமாக சரிந்து வருவதால் தேனி மாவட்ட குடிநீ ருக்கு சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது. கடந்த சில  நாட்களாக மழைப் பொழிவு இல்லாத நிலையில் புதன் கிழமை  சாரல் மழை பெய்தது. இருந்தபோதும் நீர் வரத்து  குறைவாக உள்ளது.  வைகை அணையின் நீர்மட்டம் 54.59 அடியாக உள்ளது.  292 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணை யின் நீர்மட்டம் 42 அடியாக உள்ளது. 25 கன அடி நீர் வரு கிறது. 65 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 43.62 அடியாக உள்ளது. 16 கனஅடி நீர் வருகிறது. 25 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

கே.பி.ஜானகிஅம்மாள்  இலவச டியூசன் சென்டர் துவக்கம்

மதுரை மார்ச் 3-  சுதந்திர போராட்ட வீராங்கனையும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஸ்தாபக  தலைவருமான கே.பி.ஜானகிஅம்மாள் அவர்களின்  நினைவு தினமான மார்ச் 1 புதனன்று  மாதர் சங்கத்தின் மதுரை புறநகர் மாவட்டத்தில் சார்பில் கே.பி.ஜானகி அம்மாள்  இலவச டியூஷன் சென்டர்  துவக்க விழா செல்லமபட்டி  ஒன்றியம் கருகபிள்ளை கிராமத்தில் நடைபெற்றது.  இந்த  நிகழ்ச்சிக்கு மாதர் சங்க மதுரை புறநகர்  மாவட்டச் செயலாளர் க.பிரேமலதா தலைமை வகித்தார்.  மாவட்டத் தலைவர் சி.மலர்விழி வரவற்று பேசினார். நிகழ்ச்சியினை  துவக்கி வைத்து அகில இந்திய துணைத் தலைவரும்  கே.பி.ஜானகியம்மாள் அறக்கட்டளையின் நிறுவனருமான சுதாசுந்தர்ராமன் பேசினார். சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலத் துணைத் தலைவர்  மல்லிகா,  மாநிலச் செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய், மாவட்டத் துணைச் செயலாளர் செ.முத்துராணி, உழைக்கும் பெண்கள் துணைக் (ஜீவிகா) குழுவின் நிர்வாகிகள் சித்ரா, விஜயா, அருணா, மற்றும் ஜானகியம்மாள் அறக்கட்டளையின் பொருளாளர் என்.ஜெயச்சந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  இதில் மாவட்டக் குழு உறுப்பினர்கள் சுமதி, மகாலெட்சுமி, பாண்டியம்மாள்,   நிர்வாகிகள் எழில் அமுதா, அமிர்தவள்ளி உட்பட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.